|
'திரு' என்றால் ஸ்ரீ லக்ஷ்மி. பதி என்றால் அவள் கணவன், அதனால் ஸ்ரீ அலர்மேல் மங்கையும், பத்மாவதியுமாக கீழ் திருப்பதியில் தாயார், அலர்மேல் எனில் - தாமரை மேல், பத்மம் என்றாலும் தாமரையே. அதனால் தான் அலர்மேல் மங்கை. அழகின் உறைவிடம். பிரார்த்தனா தெய்வம். பார்த்தவர்கள் கண்கள் நகருவதே இல்லை! மேல் திருப்பதி - கோவிந்தன், வேங்கடவன், வெங்கடேசன், பாலாஜி, வெங்கடாசலபதி எனப் பல நாமங்கள் கொண்ட ஏழுமலை வாசன்.

மேல் திருப்பதியில் இன்று அநேகமாக வீடுகளே இல்லை. கடைகளும் வெகு தூரத்தில்.
அப்பன் திருமலையானை நான்கு வீதிகளிலும் சுற்றி வர தடையே இல்லை. தள்ளு, முள்ளு இல்லை. சுத்தம், சுத்தம் எல்லா இடங்களிலும் சுத்தம்.
மலை முழுவதும் ஏகப்பட்ட கெஸ்ட் அவுஸ்கள் என்னும் தங்கும் இடங்கள், இரட்டைக்கட்டில், ஃபேன், 24 மணி நேரமும் குழாயில் ஜலம்.
வேங்கடநாதனை தரிசித்து, நடக்க கஷ்டமா? ஏகப்பட்ட கார்கள். ஜீப்புகள், இலவச பஸ்கள். நீங்கள் தங்குமிடம் அருகில் இறங்கிக் கொள்ளலாம். ஒய்வே இன்றி சுற்றி சுற்றி வருகிறது. ஜீப்புகள், கார்கள் மட்டும் தலைக்கு 10 ரூபாய் தான். வேங்கடரமணனை தரிசித்து வெளியே வந்தால், பெருமாள் சும்மா அனுப்புவாரா? அவர் வீடு தேடியல்லவா – நாம் வீடு பேறடைய – சென்றிருக்கிறோம். ருசியான புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், எவ்வளவு முறை வேண்டுமானாலும் வாங்கி உண்ணலாம். ஆனால் வீண் செய்யக்கூடாது! அருகிலேயே உண்ட தொன்னையைப் போட தொட்டி – கை அலம்ப குழாய் - குடி நீர்க்குழாய்! மிக ருசியான குளிர்ந்த ஐஸ் வாட்டர்!
பிறகு தான் ஞாபகம் வருகிறது, மக்களுக்கு உண்டியலில் பிரார்த்தனை சாமான்களை, பணத்தை சேர்க்க! மூன்று மணி நேரங்களுக்கொரு முறை உண்டியல் நிறைந்து, இழுத்து செல்கின்றனர் எண்ணும் இடத்திற்கு! அங்கோர் நீண்ட கோவிந்தா கோஷம்!
கோவிந்தா
ரேவதி
| விளம்பரம் |
|

|
|
|
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”நல்லதோர் வீனை செய்தே?" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
|
|
|
|
 |
 |
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”அக்கினிப் பூக்கள்" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘உறவும், உரிமையும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘நல்ல மனம் வேண்டும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
|

|
|
 |
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”பாலைவனச் சோலை" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘அதற்கொரு நேரம் வரும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘தென்றல் வீசட்டும்’ ராணுவம், அதன் கட்டுப்பாடு பற்றி
இப்போது விற்பனையில்
|
|